உள்ளூர் செய்திகள்

 பொதுமக்கள் மோசடி செய்த நபரின் வீட்டை முற்றுகையிட்ட காட்சி.

பல்லடத்தில் பணம் மோசடி செய்த நபரின் வீட்டை பொதுமக்கள் முற்றுகை

Published On 2023-03-29 11:29 GMT   |   Update On 2023-03-29 11:29 GMT
  • நிலங்களை எழுதி வாங்கிக் கொண்டும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
  • பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

பல்லடம் :

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த வேலப்பகவுண்டம் பாளையத்தை சேர்ந்த 3பேர் திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டும், நிலங்களை எழுதி வாங்கிக் கொண்டும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் பல்லடம்போலீஸ் நிலையத்தில்புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்நேற்று பாதிக்கப்பட்டவர்கள் பல்லடம்உடுமலை சாலையில்மோசடி செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் அவ ர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடன் தங்களது வேதனைகளை தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News