உள்ளூர் செய்திகள்

நகர்மன்ற கூட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம். 

காங்கயம் நகராட்சி 18 வார்டுகளில் ரூ.40 லட்சத்தில் குடிநீர் குழாய் பழுது சீரமைப்பு

Published On 2023-09-30 04:55 GMT   |   Update On 2023-09-30 04:55 GMT
  • கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் ந.சூரியப்பிரகாஷ் தலைமை தாங்கினார்.
  • பழுதுகளை சரி செய்வதற்கு ரூ.40 லட்சம் மதிப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கயம்:

காங்கயம் நகராட்சி அலுவலகத்திலுள்ள நகர்மன்ற கூடத்தில் காங்கயம் நகர்மன்ற சாதாரண கூட்டமானது நடைபெற்றது.நகர்மன்ற தலைவர் ந.சூரியப்பிரகாஷ் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் துணைத் தலைவர் கமலவேணி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலக ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் காங்கயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் குடிநீர்க் குழாய்கள் மற்றும் மின் மோட்டார்களின் பழுதுகளை சரி செய்வதற்கு ரூ.40 லட்சம் மதிப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் இருந்து 9-வது வார்டு வரை குடிநீர் குழாய்களில் ஏற்படும் பழுதை சரி செய்வதற்கும், மின் மோட்டார்கள் மற்றும் சிறு மின் விசைப்பம்பு ஆகியவற்றில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதற்கும் ரூ.20 லட்சம் மதிப்பிலும், 10-வது வார்டு முதல் 18-வது வார்டு வரை உள்ள குடிநீர் குழாய்கள் மற்றும் மின் மோட்டார்கள் பழுதுகளை சரி செய்ய ரூ.20 லட்சம் மதிப்பிலும் மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கயம் நகராட்சி பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்குவதற்கு ரூ.1 லட்சம் மதிப்பில் நகராட்சி பொது நிதியிலிருந்து வழங்கப்படுவது உள்பட மொத்தம் 18 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து காங்கயம் நகராட்சியின் நகர்மன்றத் தலைவர், ஆணையாளர், நகர்மன்ற துணைத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்காக ரூ.10 ஆயிரம் வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News