உள்ளூர் செய்திகள்

யோகா விழிப்புணர்வு தொடக்க விழா நடைபெற்ற காட்சி.

இளம்வயதிேலயே மாணவர்கள் யோகாவை கற்றுக்கொள்ள வேண்டும் - மேயர் அறிவுறுத்தல்

Published On 2023-04-07 10:41 GMT   |   Update On 2023-04-07 10:41 GMT
  • மாநகராட்சி பள்ளிகளில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
  • ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்படும்.

திருப்பூர் :

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள் மத்தியில் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், அதை முறையாக தொடர்ந்து பயின்று பின்பற்றும் வகையிலும் திட்டமிடப்பட்டு ள்ளது.மாநகராட்சி பள்ளிகளில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இதன் தொடக்க விழா கே.வி.ஆர்., நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.துணை மேயர் பாலசுப்ரம ணியம், கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, கல்விக்குழு தலைவர் திவாகர், உதவி கமிஷனர் செல்வநாயகம் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்து பேசுகை யில், யோகா வகுப்புகள் மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும் துவங்கி ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்படும். மேலும், அனைத்து பள்ளிகளிடையே யோகாசன போட்டிகள் நடத்தி சிறப்பிடம் பெறுவோருக்கு பரிசளிக்கப்படும் என்றார்.

பயிற்சியை துவக்கி வைத்து மேயர் தினேஷ்குமார் பேசுகையில், யோகா உடலையும், உள்ளத்தையும் சீராக வைத்திருக்க உதவும் அற்புத கலை.இதை இளம் வயதிேலயே மாணவர்கள் கற்றுக் கொள்வதன் மூலம் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைத்துக் கொள்ளமுடியும். இதைக் கற்றுக் கொள்ள உலக நாடுகளில் வாழும் பலரும் ஆர்வமாக உள்ளனர் என்றார்.

Tags:    

Similar News