உள்ளூர் செய்திகள் (District)

ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த காட்சி.

ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-08-22 09:49 GMT   |   Update On 2022-08-22 09:49 GMT
  • இஞ்சிமேடு கிராமத்தில் நடந்தது
  • திரளான பக்தர்கள் தரிசனம்

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், அருகே உள்ள இஞ்சிமேடு, கிராமத்தில் உள்ள ஆனந்தவிநாயகர், கோவில் புதிதாக கட்டப்பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசம் வைத்து.விநாயகர் பூஜை, கோ பூஜை, நாடி சந்தனம், அங்குூர் பணம், ஆகிய மூன்று கால யாகபூஜைகள், ஆனந்தன், ஐயர் குழுவினரால் பல்வேறு மூலிகைகள் மூலம் செய்தனர்.பின்னர் மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள்.

பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர் முன்னதாக மூலவர் ஆனந்த விநாயகருக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைத்து. பல்வேறு அபிஷேகங்கள் செய்து. புனித நீரை ஆனந்த விநாயகருக்கு, ஊற்றினார்கள்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், இஞ்சிமேடு கிராம பொதுமக்கள், பெரியவர்கள், செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News