உள்ளூர் செய்திகள் (District)

கோத்தகிரியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

Published On 2023-04-06 09:08 GMT   |   Update On 2023-04-06 09:08 GMT
  • புகையிலை பொருட்கள் விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
  • போலீசார் அவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து கோத்தகிரி உதவி காவல் ஆய்வாளர் ரகுமான்கான் தலைமையிலான போலீசார் புகையிலை பொருட்கள் விற்பவர்களை கண்டறிய தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கோத்தகிரி அரவேனு பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்றிருந்ததை கண்டு அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் அரவேனுவை சேர்ந்த ரவி என்பதும், அவர் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News