வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஏற்காட்டில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
- வேளாண்மை உதவி இயக்குனர் தங்க ராஜ் தலைமையில் மாவட்ட அளவிலான விவசா யிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
- இதில், 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஏற்காடு:
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக அட்மா திட்டத்தின் கீழ் ஏற்காடு முண்டகாபாடி கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் தங்க ராஜ் தலைமையில் மாவட்ட அளவிலான விவசா யிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தியத்தின் செந்தில்குமார் கலந்து கொண்டு உழவன் செயலி பயன்பாடு குறித்து எடுத்துக் கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் பிரபுதேவா நடைமுறையில் உள்ள திட்டங்கள் பற்றி கூறினார்.
இதேபோல் ஏற்காடு மஞ்சகுட்டை கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் தங்கராஜ் தலை மையில் விவசாயிகளுக்கு பயிற்சி நடத்தப்பட்டது. மேலும் வேளாண்மை உதவி இயக்குனர் தங்க ராஜ் தலைமையில் 50 விவசாயிகள் ஒரு நாள் கண்டு உணர்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு அறுவ டைக்குப் பின் மதிப்பு கூட்டுதல் பற்றியும், ஆராய்ச்சி நிலையத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.