பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
- இலவச பைப்புகள் மற்றும் 50 சதவீத மானியத்தில் பொருட்கள் வழங்கப்படும்.
- கால நிலைகள், பருவ நிலைகளுக்கு ஏற்ப பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை காவளூர் கிராமத்தில் அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை தொழில் நுட்பக்குழு சார்பில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுவினர்க்கான முன் பருவ பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காவளூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
வட்டார தொழில் நுட்பக்குழு மேலாளர் மாதா லெட்சுமி வரவேற்றார்.
இதில் வேளாண் உதவி இயக்குநர் மோகன் முன்னிலை வகித்து பேசியதாவது கால நிலைகள், பருவ நிலைகளுக்கு ஏற்ப பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என பேசினார்.
மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஓரு பண்ண குடும்பத்திற்கு தலா 2 தென்னை கன்றுகள் வழங்கப்பட உள்ளதாகவும், நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் இலவச பைப்புகள் மற்றும் 50 சதவீத மான்யத்தில் சிங் சல்பேட், கடப்பாரை, மண்வெட்டி, இரும்பு பாண்டு, கைதெளிப்பான், பவர் ஸ்பிரே, ஆயில் இன்ஜின், ஆகியவை வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதில் உதவி வேளாண் அலுவலர் சிங்காரவேலு மற்றும் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.