உள்ளூர் செய்திகள்

எருமபட்டி அருகே திருநங்கை சாவில் மர்மம் நீடிப்பு

Published On 2023-04-09 07:32 GMT   |   Update On 2023-04-09 07:32 GMT
  • ருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
  • அந்த வழியாகச் சென்ற பயணிகள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் தகவல் தெரிவித்தனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் எருமபட்டி ஒன்றியம் வடவத்தூர் எல்லை கல் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழல் கூடத்தில் நேற்று திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த வழியாகச் சென்ற பயணிகள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் தகவல் தெரிவித்தனர்.

அவர் எருமப்பட்டி போலீசில் கொடுத்த புகார் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருநங்கையின் பிணத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

விசாரணையில் பிணமாக கிடந்த திருநங்கை சேந்தமங்கலத்தை அடுத்த பழைய பாளையத்தைச் சேர்ந்த ராஜூ மகன் ஸ்ரினிகா(வயது 26) என்பது தெரிய வந்தது. அவரது முழங்காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டாரா? அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாரா? என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கை சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

அவர் இறப்பதற்கு முன்பாக யாருடனும் செல்போனில் பேசினாரா? அவர் யாருடனாவது வாக னத்தில் சென்றாரா? அது தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு காமிராக்க ளில் பதிவாகி உள்ளதா? என போலீசார் தீவிர விசா ரணை நடத்தி வருகிறார்கள்.எருமபட்டி அருகே

திருநங்கை சாவில் மர்மம் நீடிப்பு 

Tags:    

Similar News