உள்ளூர் செய்திகள்

வீட்டில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

Published On 2023-06-07 07:31 GMT   |   Update On 2023-06-07 07:31 GMT
  • தொட்டியத்தில் வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
  • எரிசாராயம், 40 லிட்டர் ஊறல் அழிப்பு

திருச்சி,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அழகுநாச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 3 லிட்டர் எரிசாராயம் மற்றும் 40 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். அதேபோல் அங்கிருந்த சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தொட்டியம் போலீசார், கார்த்திகைப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 40), தமிழரசன் (28) ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அந்த பகுதியை முசிறி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.தொடர்ந்து அந்த பகுதியில் வேறு எங்காவது சாராயம் காய்ச்சப்படுகிறதா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News