உள்ளூர் செய்திகள்
- முசிறி அருகே நடந்த விபத்தில் வாலிபர் பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
முசிறி,
சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவரது மகன் சரவணன் (31). இவர் முசிறியை அடுத்த சாலப்பட்டியில் தனது உறவினர் ஆறுமுகம் என்பவரது தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் தண்டலைப்புத்தூரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் எதிரே கிடந்த சிமெண்ட் கல்லில் மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணன் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.