உள்ளூர் செய்திகள் (District)

மூன்று மாத குழந்தை மூச்சு திணறி சாவு

Published On 2023-03-26 08:15 GMT   |   Update On 2023-03-26 08:15 GMT
  • ஸ்ரீரங்கத்தில்குழந்தைகள் காப்பகத்தில் 3 மாத குழந்தை பரிதாப சாவு
  • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

திருச்சி, 

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் தனியார் குழந்தைகள் நல காப்பகம் உள்ளது. சமீபத்தில் கடலூரில் இருந்து மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று இந்த காப்பகத்தில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு அந்த 3 மாத குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.இதையடுத்து உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News