உள்ளூர் செய்திகள்

லால்குடி அருகே முன்னாள் ராணுவ வீரர் மர்ம சாவு

Published On 2023-05-25 06:07 GMT   |   Update On 2023-05-25 06:07 GMT
  • லால்குடி அருகே முன்னாள் ராணுவ வீரர் பலியானார்
  • மதுவுக்கு அடிமையான முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் ஏற்கனவே பலமுறை அதிக மது போதையில் பல இடங்களில் விழுந்து கிடந்துள்ளார்

திருச்சி,

லால்குடி அருகே உள்ள அரியூர் ஓதத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் அதிக மது போதைக்கு அடிமையாகி உள்ளார்.இந்நிலையில் நேற்று ரமேஷ் லால்குடி கோப்பவாளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகாமையில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.பக்கத்து வீட்டை சேர்ந்த யுவராஜ் என்பவர் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும் ரமேஷ் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, மதுவுக்கு அடிமையான முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் ஏற்கனவே பலமுறை அதிக மது போதையில் பல இடங்களில் விழுந்து கிடந்துள்ளார். தற்போதும் மது போதையில் மயங்கி விழுந்ததில் அவரது வலது கை, மார்பு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். முன்னாள் ராணுவ வீரர் ரத்த காயங்களுடன் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News