உள்ளூர் செய்திகள் (District)

முதலிப்பட்டியில் கால்நடை தடுப்பூசி முகாம்

Published On 2023-01-04 08:57 GMT   |   Update On 2023-01-04 08:57 GMT
  • முதலிப்பட்டியில் கால்நடை தடுப்பூசி முகாம் நடைபெற்றது
  • பல்வேறு நோய்களை தடுக்கும் தடுப்பூசிகளைப் பற்றி மாணவிகள் அட்டவணையைக் கொண்டு விழிப்புணர்வு விளக்கமளித்தனர்.

தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் முதலிப்பட்டி சிற்றூரில் சிறப்பு கால்நடை தடுப்பூசி முகாம் கால்நடை மருத்துவர் பாரிவேல் தலைமையில் நடந்தது. உதவி மருத்துவர் டாக்டர் அஞ்சலி, ஆய்வாளர் கார்த்திகேயன், தொடர்பு பணியாளர்கள் பேபி, பாபு மற்றும் பராமரிப்பு கால்நடை பராமரிப்பு உதவியாளர் சேகர் ஆகியோர் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில் முசிறி எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த வேளாண் மாணவிகள் ஆஷிஹா, பவானி, சசி பாலா, தீபிகா, தீபா, தாரணி மற்றும் கௌசல்யா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சுமார் 534 கால்நடைகள், 4 எருமைகள், 416 வெள்ளாடுகள், 385 செம்மறி ஆடுகள் மற்றும் 20 கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது . மேலும் பல்வேறு நோய்களை தடுக்கும் தடுப்பூசிகளைப் பற்றி மாணவிகள் அட்டவணையைக் கொண்டு விழிப்புணர்வு விளக்கமளித்தனர்.

Tags:    

Similar News