உள்ளூர் செய்திகள்

திருச்சியில் பெட்டி, பெட்டியாக புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2023-05-29 07:43 GMT   |   Update On 2023-05-29 07:43 GMT
  • ஏர்போர்ட் வயர்லஸ்ரோட்டில் உள்ள கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
  • புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது -கார் பறிமுதல்

திருச்சி

திருச்சி ஏர்போர்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாலாட்சி மற்றும் போலீசார் ஏர்போர்ட் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வந்தனர் .அப்போது வயர்லெஸ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரிய வந்தது. அப்போது பெட்டி பெட்டியாக புகையிலைப் பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக திருச்சி கே.கே.நகர் சிந்தாமணி நகரை சேர்ந்த சுரேஷ், திருச்சி ஏர்போர்ட் காமராஜ் தெரு காந்தி நகரைச் சேர்ந்த அப்பாவு சகாயராஜ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News