உள்ளூர் செய்திகள் (District)
கட்டிடத் தொழிலாளி தவறி விழுந்து சாவு
- கட்டிடத்தின் படிகட்டில் இருந்து எதிர்பாராதமாக விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 49 ). கட்டிட தொழிலாளியான இவர், பொன்மலை பிள்ளையார் கோவில் மேற்கு தெரு பகுதியில் நடைபெற்று புதிய கட்டிடம் கட்டும் வேலையில் தங்கி வேலை பார்த்து வந்தார். பணியின் போது கட்டிடத்தின் படிக்கட்டில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சக தொழிலாளிகள் சரவணனை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.