உள்ளூர் செய்திகள் (District)

முசிறி எம்.ஐ.டி வேளாண் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

Published On 2023-01-07 08:57 GMT   |   Update On 2023-01-07 08:57 GMT
  • முசிறி எம்.ஐ.டி வேளாண் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது
  • இந்நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலகர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முசிறி:

முசிறி எம் ஐ டி வேளாண் கல்லூரியின் நாட்டு நலப்படுத்திட்ட துவக்கம் விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. எம்ஐடி வேளாண் கல்லூரி துணை தலைவர் பிரவீன் குமார் வழிகாட்டுதலின்படி நாட்டு நலப்படுத்திட்ட துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மங்களம் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா பொறைக்கழான் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மணிகண்டன் (பொறுப்பு)துணை முதல்வர்கள் தேவி, ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மங்கள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொறைக்கழான் ஒன்றிய குழு உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு நாட்டு நல பணி திட்டத்தின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் அலுவலகர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்ப டுத்திட்ட அலுவலர்கள் சுதாகர், ஆனந்த், ஷோபனா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவி மோனிஷா அனைவருக்கும் நன்றி கூறினார்.


Tags:    

Similar News