உள்ளூர் செய்திகள்
முசிறியில் காணாமல் போன ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 12 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த டி.எஸ்.பி.
- முசிறியில் காணாமல் போன ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 12 செல்போன்களை உரியவர்களிடம் டி.எஸ்.பி. ஒப்படைத்தார்
- புகார்களின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, சைபர் கிரைம் வழியாக விசாரணை நடைபெற்றது.
முசிறி:
திருச்சி முசிறி காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, சைபர் கிரைம் வழியாக விசாரணை நடைபெற்றது. தனிப்படை போலீசார் புதுக்கோட்டை, திருப்பத்தூர், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செல்போன்களை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட ஒன்றரை லட்சம் மதிப்பிலான 12 செல்போன்கள் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் உரியவர்களிடம் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருப்பதி, கருணாநிதி, பயிற்சி இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் காவலர் சூர்யன் ஆகியோர் உடனிருந்தனர்.