உள்ளூர் செய்திகள் (District)
- பூ வியாபாரி உயிரிழந்தார்
- காவிரி படித்துறைக்கு குளிக்க சென்றார்
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் துவாரகன் (வயது 65) பூ வியாபாரி. இவர் திருவரங்கம் பூ மார்க்கெட்டில் மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்வது வழக்கம். அது போல் இன்று காலை திருவரங்கம் பூ மார்க்கெட்டிற்கு வந்து பூ வாங்கினார். பூக்களை வாங்கிவிட்டு அம்மா மண்டபம் ரோடு மேல வீரேஸ்வரம் படித்துறை பகுதிக்கு வந்தார். இன்று கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி என்பதால் குளித்துவிட்டு வியாபாரத்துக்கு செல்லலாம் என்று எண்ணி படித்துறைக்கு குளிக்க வந்தார். அப்போது படித்துறையில் விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.