ஆசிரியை வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
- திருவெறும்பூரில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாக 3 லட்சம் ரூபாய் மோசடி
- 10 ஆண்டுகள் கழித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதால் மோசடி செய்தவரை தேடுவதில் போலீசாருக்கு சிக்கல்
திருச்சி,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செங்குந்தபுரம் கம்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் (வயது 54). இவர் முன்பு திருப்பரம்பூர் ஜெய் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் கே.ஆர்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர் என்பவர் அவருக்கு அறிமுகமானார். அப்போது அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை தனக்கு நன்கு தெரியும். உங்கள் மனைவிக்கு ஆசிரியை பணி வாங்கித் தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய கல்யாணசுந்தரம் கடந்த 2023 நவம்பர் 8ம் தேதி ஒரு ரூ.3 லட்சம் பணத்துக்கான காசோலையை அவரிடம் கொடுத்தார். ஆனால் அவர் வேலை வாங்கித் தரவில்லை. பின்னர் பணத்தை திருப்பி கேட்ட போது ஒரு ரூ. 22,000 மட்டும் திரும்ப கொடுத்துவிட்டு நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளார்.இதனால் பாதிக்கப்பட்ட கல்யாணசுந்தரம் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கல்யாணசுந்தரம் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி நடந்து பத்து ஆண்டுகள் கழித்து புகார் வந்துள்ளதால் குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.