உள்ளூர் செய்திகள் (District)

துறையூர் நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ முகாம்

Published On 2023-01-25 08:26 GMT   |   Update On 2023-01-25 08:26 GMT
  • துறையூர் நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
  • இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டனர்

துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூரில் வட்ட சட்டப் பணிகள் குழுவும், நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். துறையூர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு மருத்துவர் கலைமணி தலைமையில் பணியாளர்கள் வினோதா, இலக்கியா, சுபிதா, முத்துக்குமாரி, தேவிகா மற்றும் முசிறி எம்.ஐ.டி கல்லூரியில் துணை மருத்துவ படிப்பு பயிலும் மாணவிகள் ஆகியோர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டனர். முகாமில் வழக்கறிஞர் சங்க செயலாளர் கோகிலா, பொருளாளர் முகமது ரஃபீக், அரசு வழக்கறிஞர்கள் சபாபதி, சந்திரமோகன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.இலவச மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்

Tags:    

Similar News