உள்ளூர் செய்திகள்
- குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது தவறி விழுந்து இறந்தார்
- கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை
திருச்சி,திருச்சியை அடுத்த கல்லக்குடி ஆலம்பாக்கம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 80). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மூழ்கினார். இது பற்றி தகவல் அறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து முதியவரை பிணமாக மீட்டனர்.
இது குறித்து அவரது மனைவி அருள் மேரி கல்லக்குடி போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.