குதிரை வண்டி பந்தய தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை
- குதிரை வண்டி பந்தய தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யபட்டார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்
திருச்சி:
திருச்சி உறையூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சண்முகம் (வயது 25). குதிரை வண்டி வைத்திருந்த இவர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று குதிரை வண்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வந்தார். இவர் நேற்று பகல் 12.30 மணியளவில் குழுமணி டாக்கர் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த உறையூர் போலீசார் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதன் அடிப்படையில் கொலையில் தொடர்புடைய உறையூர் பகுதியை சேர்ந்த கோபி, ஹரி, விஜி ஆகிய 3 வாலிபர்களை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.அதில் திருவரும்பூரில் சமீபத்தில் நடந்த குதிரை பந்தய போட்டியில் கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் குதிரை முதல் இடத்துக்கு வந்ததாகவும் அந்த போட்டில் மேற்கண்ட குற்றவாளிகள் கலந்து கொண்டு போட்டியில் பின்தங்கியதாகும் அந்த முன் விரோதத்தில் கொலை நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.