உள்ளூர் செய்திகள்

ஆசீர்வாதபுரம் பள்ளியில் தடுப்பூசி முகாம் நடந்த காட்சி.

சாத்தான்குளம் அருகே பள்ளிகளில் தடுப்பூசி முகாம்

Published On 2022-06-18 09:19 GMT   |   Update On 2022-06-18 09:19 GMT
  • மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
  • சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், செவிலியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆசீர்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளி, அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,

பழனியப்பபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

இதில் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், செவிலியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில் 15 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News