உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

Published On 2023-05-31 09:16 GMT   |   Update On 2023-05-31 09:16 GMT
  • 70 பாட்டில்கள் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த வண்ணந்தாங்கல் கிராமத்தில் நேற்று வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த தனசேகர் (47) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.

அதனைத் தொடர்ந்து, தனசேகரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி அருகே ஜி.எஸ்.குப்பம் கிராமத்தில் மதுவிற்று கொண்டிருந்தவர்கள் போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இருப்பினும், அங்கிருந்த 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து, வழக்குப்பதிந்து தனசேகரை ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News