உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலைகள் வர்ணம் தீட்டப்பட்டு தயாராக உள்ளது.

சதுர்த்தியையொட்டி கொடைக்கானலில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்

Published On 2022-08-25 06:58 GMT   |   Update On 2022-08-25 06:58 GMT
  • பாம்பா ர்புரம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
  • சிலைகள் அனைத்தும் இயற்கையாக கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கு மாவு, காகித தூள், சொறி மரங்களின் விதைகள் மற்றும் வண்ணங்களை வைத்து வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் வடிவமை ப்பாளர்கள் தெரிவித்துள்ள னர்.

கொடைக்கானல்:

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கொடைக்கா னலில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை களை கோயில்களில் வைத்து வழிபட்டு மேலும் 4-ஆம் தேதி கொடை க்கானல் ஏரிச்சாலை மற்றும் அண்ணா சாலை பஸ் நிலையப் பகுதி மூஞ்சிக்கல் வழியாக அரசு மேல்நிலை ப்பள்ளி அருகே உள்ள ஆற்றில் கரைப்பார்கள்.

இந்நிலையில் பாம்பா ர்புரம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1 அடி முதல் 25 அடி வரையில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த சிலைகள் அனைத்தும் இயற்கையாக கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கு மாவு, காகித தூள், சொறி மரங்களின் விதைகள் மற்றும் வண்ணங்களை வைத்து வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் வடிவமை ப்பாளர்கள் தெரிவித்துள்ள னர்.

சிறியது, பெரியது என சுமார் 1065 விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக பாம்பார்புரம் பகுதியில் நடைபெற்று வருகிறது. முதல் முறையாக கொடைக்கானல் பகுதியில் இயற்கை மூலப்பொரு ட்களை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிப்பது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News