- விருதுநகரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- 2003-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிச் செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பள்ளி செயலரின் வகுப்புத் தோழர் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் மாணவி லட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்ட, ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்களும், இந்நாள் ஆசிரியர்களும் பங்கேற்று பேசினர்.
முன்னாள் மாணவர்களும் அவர்களுடைய குடும்பத்தினருடன் வருகை புரிந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன.முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கணிப்பொறி வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் மணிகண்டன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் இளையபெருமாள் மற்றும் 2003-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.