ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவிப்பு
- சிவகாசியில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.
- பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
சிவகாசி
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்தது. இதையொட்டி சிவகாசி சிவன் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்குமாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்ச ருமான ராஜேந்தி ரபாலாஜி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சிவகாசி சிவன் கோவிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், சிவகாசி ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், சிவகாசி மாநகர பகுதி செயலாளர் சாமி என்ற ராஜா அபினேஷ்வரன், முன்னாள் நகர செயலாளர் அசன்ப தூரூதீன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செ யலாளர் வேண்டுராயபுரம் சுப்பிர மணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பிலிப்வாசு, பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் தேன்ராஜன், விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் ரிசர்வ்லை யன் தேவர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட மாணவரணி அஜய்கிருஷ்ணா மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.