உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண நிதியுதவியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஜெயசீலன் உள்ளார்.

பாதிக்கப்பட்ட 83 குடும்பங்களுக்கு அரசு நிவாரண நிதிஉதவி

Published On 2023-06-07 08:24 GMT   |   Update On 2023-06-07 08:24 GMT
  • அருப்புக்கோட்டையில் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதிஉதவியை அமைச்சர் வழங்கினார்.
  • மின் மாற்றிகளும் விழுந்து சேமடைந்தது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 4-ந் தேதி அன்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையினால் வீடுகள் சேதமடைந்து, மரங்கள், மின்கம்பங்களும், ஒரு சில இடங்களில் மின் மாற்றிகளும் விழுந்து சேமடைந்தது. இதில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் ஜெயசீலன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து, மீட்பு நடவடிக்கை களை துரிதப்படுத்தினர்.

மேலும் வருவாய்த் துறை, மின்சாரத்துறை, நகராட்சி நிர்வாகம், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சூறாவளி காற்றினால் விழுந்து கிடந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் உத்தரவின்படி, சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையினால் சேதமடைந்த வீடுகள் கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட வீடுகளின் சேதத்தின் அடிப்படையில் பகுதி சேதமடைந்த 82 குடும்பங்களுக்கு தலா ரூ.4,100 நிதிஉதவி மற்றும் முழு சேதமடைந்த 1 குடும்பத்திற்கு ரூ.5,200 நிதியுதவி என 83 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 400 வழங்கப்பட்டது. இந்த உதவி தொகையை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

இதில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர்(பொ) அனிதா, நகராட்சி ஆணை யாளர் அசோக்குமார், வட்டாட்சியர் அறிவழகன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News