உள்ளூர் செய்திகள்
சிறுமியிடம் சில்மிசம் செய்த முதியவர் போக்சோவில் கைது
- சிறுமியிடம் சில்மிசம் செய்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- முதியவரை ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியை சேர்ந்த 11 வயது சிறுமி. இவர் அதிகாலையில் வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பெரியாண்டவர் (வயது74) சிறுமியிடம் அத்துமீறி நடக்க முயற்சித்தார். அப்போது சிறுமி கூச்சலிட்டார். அதைகேட்டு அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.
அவர்கள் முதியவரை பிடித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் வழக்குப்பதிவு செய்து முதியவரை போக்சோவில் கைது செய்தார்.