உள்ளூர் செய்திகள் (District)

அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர்கள் கைது

Published On 2023-06-28 09:24 GMT   |   Update On 2023-06-28 09:24 GMT
  • அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்.
  • முத்துபாண்டி என்பவரை பழிக்கு பழி வாங்க வந்ததாக கூறினார்.

விருதுநகர்

சிவகாசி தனியார் ஆஸ்பத்திரி பின்புறமுள்ள பகுதியில் சிவகாசி நடராஜர் காலனியை சேர்ந்த மகேந்திரன்(24), தெற்கு தெருவை சேர்ந்த மகேந்திரகுமார், முடங்கிநாடார் தெருவை சேர்ந்த சிவகிரி(20) ஆகியோர் சாலையில் நின்று கொண்டு அரிவாளை காட்டி அந்த பகுதியில் சென்ற பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தனர். அந்த பகுதியில் ரோந்து சென்ற டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் அவர்களை பிடித்து விசாரித்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசி வெள்ளைசாமி யாபுரம் தெருவை ேசர்ந்த வர் தினேஷ்குமார்(24). இவர் சிவகாசி வெம்பக் கோட்டை ரோட்டில் உள்ள அய்யனார் காலனி பகுதியில் அரிவாளுடன் நின்று கொண்டு அந்த பகுதியில் சென்றவர்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார். தகவல் அறிந்த டவுன் ேபாலீசார் அங்கு வந்து தினேஷ்குமாரை பிடித்து விசாரித்தனர். அவர் அந்த பகுதியை சேர்ந்த முத்துபாண்டி என்பவரை பழிக்கு பழி வாங்க வந்ததாக கூறினார். போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News