உள்ளூர் செய்திகள் (District)
அளவுக்கு அதிகமாக மது குடித்த கட்டிட தொழிலாளி சாவு
- அளவுக்கு அதிகமாக மது குடித்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
- இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 48). கட்டிட தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்த மாடசாமி இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை மகன் மகேந்திரன் ேதடினார். அப்போது சாலையோரத்தில் மயங்கிய நிலையில் மாடசாமி கிடந்தார்.
அவரை அங்கிருந்து மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் மகேந்திரன் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மாடசாமி பரிதாபமாக இறந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.