உள்ளூர் செய்திகள்

தொழிலாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டபோது எடுத்தபடம்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை

Published On 2023-02-27 09:29 GMT   |   Update On 2023-02-27 09:29 GMT
  • ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுசெயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி உறுப்பினர் அட்டை வழங்கினார்.
  • நிகழ்ச்சியில் வைப்பார் ஊராட்சி தலைவர் சக்கம்மாள் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி:

தமிழ்நாடு முறை சாரா தொழிலாளர் காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக தமிழ்நாடு கட்டுமான மற்றும் உடல் உழைப்பு (அமைப்புசாரா) தொழிலாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வைப்பார் சமுதாய நல கூட்டத்தில் நடைபெற்றது.

ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுசெயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி தலைமை தாங்கி இலவசமாக உறுப்பினர் அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் வைப்பார் ஊராட்சி தலைவர் சக்கம்மாள் ராமர், கிராம தர்மகர்த்தா வீரமல்லு, சமுதாய தலைவர் முத்துராமலிங்கம், ஐ.என்.டி.யூ.சி. வட்டார தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் முருகதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News