உள்ளூர் செய்திகள்
கடையநல்லூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
- கோமு- பேச்சியம்மாளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.
- மனவேதனை அடைந்த கோமு பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
கடையநல்லூர் அருகே உள்ள பேட்டை மலம்பேட்டை தெருவை சேர்ந்தவர் கோமு. இவரது மனைவி பேச்சியம்மாள்(வயது 26).
இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 8 வயதில் ஒரு மகன் உள்ளார். கோமு அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் பேச்சியம்மாள் திருவேட்டநல்லூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த கோமு பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.