உள்ளூர் செய்திகள் (District)

தற்கொலை செய்து கொண்ட சிவகண்ணன்.

தூத்துக்குடியில் தந்தை நினைவு நாளில் வாலிபர் தற்கொலை

Published On 2022-06-20 08:54 GMT   |   Update On 2022-06-20 08:54 GMT
  • கடந்த ஆண்டு இதே நாளில் சிவகண்ணனின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
  • தந்தை தற்கொலை செய்த அதே இடத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரை சேர்ந்தவர் சிவகண்ணன் ( வயது 27). இவர் நேற்று இரவு வீட்டு மேற்கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

தகவல் அறிந்து சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

கடந்த ஆண்டு இதே நாளில் சிவகண்ணனின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.தந்தை மறைந்த பிறகு தாயுடன் வசித்து வந்த அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தந்தை நினைவு நாளான நேற்று அவர் தற்கொலை செய்த அதே இடத்தில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News