செய்திகள்

பா.ஜனதாவுக்கு எதிராக மாவோயிஸ்டுகளை கட்சிகள் தூண்டுகின்றன - அருண்ஜெட்லி குற்றச்சாட்டு

Published On 2018-06-09 05:07 GMT   |   Update On 2018-06-09 05:07 GMT
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிரான ஆயுதமாக மாவோயிஸ்டு பயங்கரவாதிகளை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன என்று அருண்ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார். #BJP #ArunJaitley

புதுடெல்லி:

பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்ட திடுக்கிடும் தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். இத்தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மத்திய மந்திரி அருண்ஜெட்லி அரசியல் கட்சிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது வலை தள பக்கத்தில் கூறிதாவது:-

கடந்த சில நாட்களாக மாவோயிஸ்டு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதை உணர முடிகிறது. அந்த அமைப்பின் ஆதிக்கம் இல்லாத பகுதிகளிலும் பயங்கரவாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது தேசத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

 


பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிரான ஆயுதமாக மாவோயிஸ்டு பயங்கரவாதிகளை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கைகள் சரியானதல்ல.

ஆட்கொல்லி புலியின் மீது சவாரி செய்வது ஆபத்தாகத்தான் முடியும் என்பதை அக்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை வேரறுப்பது குறித்து அனைத்து தரப்பினரும் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இது மிகத் தீவிரமான வி‌ஷயம்.

இவ்வாறு அருண்ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். #BJP #ArunJaitley

Tags:    

Similar News