செய்திகள்

விசாகப்பட்டினம் விரைவு ரெயிலில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

Published On 2018-07-15 08:56 GMT   |   Update On 2018-07-15 08:56 GMT
மும்பை - விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் விரைவு ரெயிலில் இன்று காலை மும்பையை சேர்ந்த இளம்பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
மும்பை:

மும்பை - விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் விரைவு ரெயிலில் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த சல்மா தபாஸ்சம் சேக் என்ற நிறைமாத கர்பிணி பயணித்தார். இன்று காலை 8 மணியளவில் கல்யான் ரெயில் நிலையத்தை ரெயில் வந்தடைந்த போது, சல்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இதனை அடுத்து, ரெயில் நிலையத்தில் இருந்த மருத்துவ சிகிச்சை குழு அவருக்கு பிரசவம் பார்த்துள்ளது. அப்போது, அவர் இரண்டு அழகான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதனை அடுத்து, அவர் ரெயிலில் இருந்து இறக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தாயும், இரண்டு குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News