செய்திகள் (Tamil News)
பயங்கரவாதிகளுடன் இளைஞர்கள் சேருவதை தடுக்கவும் - காஷ்மீர் தாய்மார்களுக்கு ராணுவம் வலியுறுத்தல்
ஜம்மு காஷ்மீரில் உள்ள தாய்மார்கள், தங்களது மகன்கள் பயங்கரவாத வழியில் செல்லாமல் தடுக்க வேண்டும் என ராணுவ அதிகாரி கே.ஜெ.எஸ்.தில்லான் வலியுறுத்தியுள்ளார். #JammuKashmir #KJSDhillon
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜெ.எஸ்.தில்லான் இன்று சென்றார். அவர்
செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
காஷ்மீரில் வாழும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் பயங்கரவாதத்தில் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தெரியாமல் யாராவது அந்த பாதையை தேர்ந்தெடுத்து விட்டு, தற்போது அதிலிருந்து மீண்டு வர விரும்பினால், அவர்கள் திரும்புவதற்கும், அவர்களுக்கு நல்ல பாதை அமைத்து தரவும் ராணுவம் தயாராக உள்ளது.
அனைத்து காஷ்மீர் தாய்மார்களும் தங்கள் மகன்களிடம் ராணுவத்திடம் சரணடையுமாறு சொல்லுங்கள். உங்களின் பாதுகாப்பை ராணுவம் உறுதி செய்யும். மேலும், கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் 152 காஷ்மீர் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். #JammuKashmir #KJSDhillon