செய்திகள் (Tamil News)
திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் நேற்று மதியம் திருமலைக்கு வந்தார்.
ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு வந்த அவரை தேவஸ்தான துணை செயல் அலுவலர் பாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இன்று காலை அஷ்டதள பாதபத்ம ஆராதனை சேவையில் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
அதைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டார். அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதங்களை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.
தமிழக சட்டசபையில் 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடத்தில் வெற்றி பெற்று 122 இடங்களுடன் பெரும்பான்மை பெற்றுள்ளது.
கடந்த 1½ ஆண்டுகளாக அரசுக்கு இருந்த பெரும்பான்மை குறைவிற்கான சிக்கல் இடைத்தேர்தல் முடிவால் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் நேற்று மதியம் திருமலைக்கு வந்தார்.
ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு வந்த அவரை தேவஸ்தான துணை செயல் அலுவலர் பாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி திருமலையில் இரவு வராகசாமி, ஹயக்ரீவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அதைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டார். அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதங்களை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.
தமிழக சட்டசபையில் 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடத்தில் வெற்றி பெற்று 122 இடங்களுடன் பெரும்பான்மை பெற்றுள்ளது.
கடந்த 1½ ஆண்டுகளாக அரசுக்கு இருந்த பெரும்பான்மை குறைவிற்கான சிக்கல் இடைத்தேர்தல் முடிவால் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.