செய்திகள் (Tamil News)
பிரியங்கா

இந்த போட்டியில் நான்தான் ஆட்ட நாயகி: மம்தாவிடம் தோல்வியடைந்த பிரியங்கா சொல்கிறார்

Published On 2021-10-03 10:27 GMT   |   Update On 2021-10-03 10:27 GMT
பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட பிரியங்கா 25 ஆயிரத்திற்கும் அதிகமாக வாக்குகளை பெற்றுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலைப் பெற்றார். இறுதியில் 58 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.

முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் பிரியங்கா 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். மம்தாவுக்கு எதிராக தோல்வியடைந்தாலும், இடைத்தேர்தல் என்ற ஆட்டத்தில் நான்தான் ஆட்ட நாயகி என பிரியங்கா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா கூறுகையில் ‘‘இந்த போட்டியில் (இடைத்தேர்தல்) நான்தான் ஆட்ட நாயகி. ஏனென்றால், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மிகவும் சாதகமான தொகுதியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளேன். தொடர்ந்து கடுமையாக உழைப்பேன்’’ என்றார்.

Tags:    

Similar News