இந்தியா (National)
கைது

வெளிநாட்டு பெண்ணை மசாஜ் செய்வதாக கூறி கற்பழித்த வாலிபர் கைது

Published On 2022-03-19 08:40 GMT   |   Update On 2022-03-19 08:40 GMT
ஜெய்பூருக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணை மசாஜ் செய்வதாக கூறி கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜெய்ப்பூர்:

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார்.

டெல்லியை சுற்றிபார்த்து விட்டு ஜெய்ப்பூர் வந்த அவர், அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது அவர், ஆயுர்வேத மசாஜ் செய்ய விரும்பினார். இதற்காக ஜெய்ப்பூரில் இருந்த ஒரு ஆயுர்வேத மசாஜ் சென்டருக்கு போன் செய்தார்.

அங்கிருந்த கேரளாவை சேர்ந்த பிஜூ முரளிதரன் என்பவர் அந்த பெண்ணுக்கு மசாஜ் செய்ய சென்றார்.

மசாஜ் செய்த போது அந்த பெண்ணை, பிஜூ முரளிதரன் பாலியல் பலாத்கராம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த பெண் ஜெய்ப்பூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பெண்ணுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து வெளிநாட்டு பெண்ணுக்கு மசாஜ் செய்த கேரள வாலிபர் பிஜூ முரளிதரன் கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376 (கற்பழிப்பு) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Similar News