இந்தியா (National)

மணிப்பூரில் ஆயுதங்களுடன் 6 கிளர்ச்சியாளர்கள் கைது

Published On 2024-10-23 05:21 GMT   |   Update On 2024-10-23 05:21 GMT
  • சோதனையில் துப்பாக்கி, வெடிமருந்துகள், மீட்கப்பட்டன.
  • 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூர்:

மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பாலில் தடை செய்யப் பட்ட காங்லீபாக் கம்யூனிஸ்டு அமைப்பின் (மக்கள் போர்க்குழு) 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை மணிப்பூர் போலீசார் இன்று தெரிவித்தனர்.

அவர்கள் சட்டவிரோத ஆயுதப் பரிவர்த்தனை மற்றும் பொதுமக்கள் அரசு, தனியார் நிறுவனங்களில் மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், டெட்டனேட்டர்கள், 9 மி.மீ. பிஸ்டல், 3 வெடிகுண்டுகள், 4 சக்கர வாகனம், 2 மோட்டார் சைக்கிள், 6 செல்போன்கள் மீட்கப்பட்டன.

போங்பால் கிராமத்தில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் துப்பாக்கி, வெடிமருந்துகள், மீட்கப்பட்டன.

Tags:    

Similar News