இந்தியா

இந்திய ஒற்றுமை யாத்திரை: பல்லாரியில் 15-ந் தேதி ராகுல்காந்தி பேசுகிறார்

Published On 2022-10-11 05:42 GMT   |   Update On 2022-10-11 05:42 GMT
  • வரும் 15-ந் தேதி பல்லாரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார்.
  • எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் ராய்ச்சூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பெங்களூரு:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடோ யாத்ரா) கர்நாடகாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதைதொடர்ந்து வரும் 15-ந் தேதி பல்லாரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார்.

இதையொட்டி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் ராய்ச்சூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னதாக நேற்று நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரை, துமகூரு வழியாக மத்திய கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்காவை சென்றடைந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News