இந்தியா (National)
டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
- வெடிகுண்டு மிரட்டல் வந்த போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
- வெடிகுண்டு மிரட்டல் வந்த போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த 24-ந்தேதி மர்ம நபர் ஒருவர் போன் செய்து வெடிகுண்டு இருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறினார்.
இதையடுத்து போலீசார் விமான நிலையத்தில் சோதனை செய்தனர். அது வெறும் புரளி என்று தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் வந்த போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் (20) என்பவர் மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.