இந்தியா (National)

ஆரஞ்சுகளை பரிசோதிக்கவும்.. யுவராஜ் சிங்கின் என்ஜிஓ வெளியிட்ட மார்பக புற்றுநோய் விளம்பரத்தால் சர்ச்சை

Published On 2024-10-24 13:23 GMT   |   Update On 2024-10-24 13:24 GMT
  • YouWeCan பவுண்டேசன் என்ற பெயரில் யுவராஜ் சிங் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.
  • டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனம் [என்ஜிஓ] சர்சசை ஒன்றில் சிக்கியுள்ளது. YouWeCan பவுண்டேசன் என்ற பெயரில் யுவராஜ் சிங் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மூலம் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் மார்பக புற்றுநோய் குறித்த விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த விளம்பரத்தில் கையில் 2 ஆரஞ்சு பழங்களுடன் சேலை அணிந்த பெண் ஒருவர் பேருந்தில் நின்றுகொண்டிருக்கும் சித்திரம் உள்ளது. அவருக்கு அருகே கூடை நிறைய ஆரஞ்சு பழங்களுடன் முதிய பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார். 'மாதத்துக்கு ஒரு முறை உங்களின் ஆரஞ்சுகளை பரிசோதனை செய்யுங்கள்' என்று அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது. இங்கு பெண்களின் மார்பங்கள் ஆரஞ்சுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

 

பெண்கள் 25 வயதை எட்டியதில் இருந்து ஒவ்வொரு மாதமும் மார்பக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதே இந்த விளம்பரத்தின் நோக்கம் ஆகும். ஆனால் அதற்காக அவர்கள் கையாண்ட வழிமுறை தவறாக முடிந்துள்ளது.

இந்த போஸ்டர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் டெல்லி மெட்ரோ சேவை நிர்வாகம் இந்த போஸ்டர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது.

Tags:    

Similar News