நிஜ வாழ்க்கையில் இதுபோன்று கூறப்படுவதில்லை: காங்கிரஸ் தலைவர் ஆவேசம்
- ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார்.
- அப்போது, என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான் என கூறினார்.
புதுடெல்லி:
ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளிக்கையில், நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை.ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆகவேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என கூறியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித் தனியார் செய்தி நிறுவனத்துக்கு கூறியதாவது:
பா.ஜ.க. அரசு 10 ஆண்டாக ஆட்சியில் உள்ளது. காலங்காலமாக தாங்கள் போற்றும் பணியை இந்த அரசு செய்திருந்தால் வேறு எதற்கும் நேரம் கிடைக்காத அளவுக்கு அந்த பணிகள் இருந்திருக்கும்.
இதுவரை நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது. இப்போது யாரோ ஒருவர் நம் முன்னே வந்து 'நான் மனிதனே இல்லை, நான் உயிரியல் இல்லை' என்று சொல்வது நமக்கு பெரிய கேலிக்கூத்து. அப்படியானால் நாம் என்ன சொல்வோம்?
இந்த விஷயங்கள் தியேட்டர் மற்றும் புனைகதைகளில் கூறப்படுகின்றன. நிஜ வாழ்க்கையில் இப்படியெல்லாம் சொல்லப்படுவதில்லை, இதற்கு என்ன பதில் சொல்வோம் என கேள்வி எழுப்பினார்.