இந்தியா
டெல்லியில் தேர்வின்போது ஆசிரியருக்கு சரமாரி கத்திக்குத்து... மாணவன் வெறிச்செயல்
- பலத்த காயமடைந்த ஆசிரியர் பிஎல்கே கபூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- கத்தியால் குத்திய மாணவனை போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லியில் இன்று அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவரை மாணவன் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லி இந்தர்புரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெறும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வை கண்காணிக்கும் பணிக்காக ஆசிரியர் பூதேவ் சென்றுள்ளார். அப்போது, மாணவன் ஒருவன் ஆசிரியரை கத்தியால் குத்தி உள்ளான். இதில் பலத்த காயமடைந்த ஆசிரியர், பிஎல்கே கபூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கத்தியால் குத்திய மாணவனை போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு மாணவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.