இந்தியா

ஜல்லிக்கட்டு, உச்ச நீதிமன்றம்

ஜல்லிக்கட்டு வழக்கு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

Published On 2022-12-08 22:24 GMT   |   Update On 2022-12-08 22:24 GMT
  • ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
  • இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

புதுடெல்லி:

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

Tags:    

Similar News