இந்தியா
வயநாடு செல்லும் வழியில் விபத்தில் சிக்கிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர்
- வயநாட்டில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே இன்று விபத்துக்குள்ளானது.
கேரளாவில் பெய்த பருவமழையின் கோர தாண்டவத்தால் மலைக்கிராமங்கள் மண்ணில் புதைந்தன. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 160 பேர் பலியானார்கள். மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில், ராணுவம் மீட்புப்பணியில் இறங்கி உள்ளது. வயநாட்டில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 160 பேர் பலியாகியுள்ள நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே இன்று விபத்துக்குள்ளானது.
அவர் வயநாடுக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அவர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அம்மாநில சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.