இந்தியா (National)

கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி கடிதம்

Published On 2024-07-14 09:46 GMT   |   Update On 2024-07-14 09:55 GMT
  • உயர்கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீட் அம்பலப்படுத்தி உள்ளது.
  • பொது மருத்துவக் கல்வி முறையை கட்டமைப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது.

புதுடெல்லி:

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

* உயர்கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீட் அம்பலப்படுத்தி உள்ளது.

* நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் சம வாய்ப்புடன் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

* அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதி வாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதை தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது.

* பொது மருத்துவக் கல்வி முறையை கட்டமைப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது.

* தமிழ்நாட்டின் பொது சுகாதார அமைப்பை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கட்டாயம் கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News