இந்தியா (National)
கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி கடிதம்
- உயர்கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீட் அம்பலப்படுத்தி உள்ளது.
- பொது மருத்துவக் கல்வி முறையை கட்டமைப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது.
புதுடெல்லி:
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
* உயர்கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீட் அம்பலப்படுத்தி உள்ளது.
* நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் சம வாய்ப்புடன் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
* அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதி வாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதை தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது.
* பொது மருத்துவக் கல்வி முறையை கட்டமைப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது.
* தமிழ்நாட்டின் பொது சுகாதார அமைப்பை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கட்டாயம் கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.