இந்தியா (National)

சந்திரயான் 3 வெற்றி எதிரொலி- இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு

Published On 2023-08-25 21:09 GMT   |   Update On 2023-08-25 21:09 GMT
  • கிரீசில் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி.
  • விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திக்கிறார்.

பெங்களூரு:

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிகழ்வை தென் ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கிருந்து காணொலி முலம் பார்த்தார்.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், தேசியக்கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பின், காணொலி வாயிலாக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தும் பேசினார். இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை போனில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில், கிரீசில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை இன்று நேரில் சந்திக்கிறார்.

நேரடியாக பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு அதிகாலை 5.55 மணியளவில் பிரதமர் மோடி வருகிறார். கர்நாடக பா.ஜ.க. தலைவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

காலை 6.30 மணியளவில் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பீனியாவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் செல்கிறார்.

காலை 7 மணியளவில் இந்தியா சரித்திர சாதனை படைக்க பணியாற்றிய விஞ்ஞானிகளைச் சந்தித்து பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News